Dinavel News Today # பொன்னமராவதி ஒன்றிய தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாஸ் வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் 100- நலிந்தோர் குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன


பொன்னமராவதி ஒன்றிய தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாஸ் வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் 100-  நலிந்தோர் குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன..

இரா.பாஸ்கர்  செய்தியாளர்

மே.04

புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதி பேரூராட்சி வளாகத்தில் பொன்னமராவதி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஊரடங்கு உத்தரவால் பெரும் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களுக்கு உதவும் வண்ணம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன.
இதனையடுத்து மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாஸ்,வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி முன்னிலையில் 100-நலிந்தோர் குடும்பத்திற்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட  மளிகைப் பொருட்களை மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாஸ்,வட்டாட்சியர் திருநாவுக்கரசு மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இணந்து நலிந்தோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வேலு, பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊராட்சி தலைவர் கீதா சோலையப்பன், 
லயன் சோலையப்பன், 
லயன் பாலா முரளி, பேரூராட்சி பணியாளர் பாபு, பொன்னமராவதி ஒன்றிய தலைமை ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஷாஸ்தீன்,
ஒன்றிய துணைத் செயலாளர் அப்பாஸ், ஜெகதீஷ் குமார், மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட  பலர் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா