# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.




அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா


 ஈரோடு  மாவட்டம் அறச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 25.1.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை  துவங்கப்பட்டது.  இப்பள்ளியில் 956 மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் . பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் முதன்முதலாக  சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை  சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது .  

 பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர்  திரு.ரத்தினசாமி கவுண்டர் அவர்களும் மற்றும் அறக்கட்டளையின் சார்பாக சமூக சேவகரும் தினவேல் நாளிதழ் சேலம் தெற்கு நிருபர் திரு பிரபு அவர்களும் கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ஐ. கோபால் அவர்கள் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று இவ்விழாவை சிறப்பாக நடத்தினார்.  மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள விருந்தினர்கள் அனைவரும் மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்தி பேசினர். ஆசிரியர் திரு.த.செந்தில்நாதன் அவர்கள் நன்றியுரை வழங்கி இவ்விழாவை நிறைவு செய்தார்

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.