# DINAVEL NEWS # கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உலக அழிவு பற்றி ஒரு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் நடந்த மனித உரிமைகள் தின மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மணிகுமார்
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உலக அழிவு பற்றி ஒரு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் நடந்த மனித உரிமைகள் தின மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனித பாதுகாப்பு கழகம் சார்பில் மனித உரிமைகள் தின மாநில மாநாடு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று இரவு நடந்தது. மனித பாதுகாப்பு கழகம் நிறுவனர் டாக்டர் ஜெயமோகன் மும்மாத ஆன்மீகவாதிகள் ஜெயா பகவதி புகழேந்தி, ஆயர் ஜார்ஜ் ஈபென், மௌலவி அபுசாலிக் உட்பட ஏராளமானோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். கன்னியாகுமரியில் உலக நாடுகளின் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விமான நிலையம் அமைக்க வேண்டும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் வருங்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள உலக்கை அருவி குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
Comments
Post a Comment