# தினவேல் செய்திகள் # பெரியார் பற்றி தெரியாமலே படிக்காமலே ரஜினி பேசி வருகிறார்.



மணிகுமார்
நாகர்கோவில்

பெரியார் பற்றி தெரியாமலே படிக்காமலே ரஜினி பேசி வருகிறார் என்றும் பாஜக எதை சொல்ல வேண்டும் என நினைக்கிறதோ அதை ரஜினி வழியாக நிறைவேற்றி வருவதாகவும், வழக்கு போட்டால் நான் சந்திக்கிறேன் என ரஜினி சொல்வது, புகார் கொடுத்தால் தமிழகத்தில் எந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வார்கள் ? காரணம் இங்கே எடப்பாடி அரசு பாஜக அரசாக செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பாவரசு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட   இக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பாவரசு  செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளில் தாழ்த்தபட்ட மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க படுவது இல்லை என்றும், ரஜனி பாஜகவின் கைப்பாவையாக திகழ்ந்து வருகிறார்,   பெரியார் பற்றி தெரியாமலே படிக்காமலே ரஜினி பேசி வருகிறார் என்றும் பாஜக எதை சொல்ல வேண்டும் என நினைக்கிறதோ அதை ரஜினி வழியாக நிறைவேற்றி வருவதாகவும், ரஜினியின் இரண்டாவது மகள் திருமனம் கூட பெரியார் கொள்கை படியே நடந்ததாகவும்,  வழக்கு போட்டால் நான் சந்திக்கிறேன் என ரஜினி சொல்வது, புகார் கொடுத்தால் தமிழகத்தில் எந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வார்கள் ? காரணம் இங்கே எடப்பாடி அரசு பாஜக அரசாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா