# தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் # திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் 64 பேருக்கு தொடர்ந்து இலவசமாக முடித்திருத்தம் முகச்சவரம் செய்து அவர்களின் நலன் காக்க தூய்மை பணிவிடை செய்து உதவினர்.

 
திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் 64 பேருக்கு தொடர்ந்து இலவசமாக  முடித்திருத்தம் முகச்சவரம் செய்து அவர்களின் நலன் காக்க தூய்மை பணிவிடை செய்து உதவினர்.


திருப்பூர் காலேஜ் ரோடு, சேவா சமிதி சங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டி முன் எச்சரிக்கையாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை, மூலம் இங்கு தங்க வைக்கப்பட்ட பல மாவட்டங்களில் உள்ள மக்கள் கடந்த 17 நாட்களாக பல்வேறு உதவிகளைப் பெற்று  தங்க வைக்கப்பட்ட இவர்களுக்கு இன்று திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் இங்குள்ள 64 பேருக்கு தொடர்ந்து இலவசமாக  முடித்திருத்தம் முகச்சவரம் செய்து அவர்களின் நலன் காக்க தூய்மை பணிவிடை செய்தனர்.

தொடர்ந்து 07-04-2020 அன்று திருப்பூர் சிக்கனா காலேஜ் அருகில் உள்ள சந்திரகவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆதரவற்றோர் மற்று பல மாவட்டங்களைச் சார்ந்த 60 மேற்பட்டோர்க்கு முடித்திருத்தம் முகச்சவரம் செய்துள்ளனர், 2வாது நாள்: 08-04-2020 அன்று திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பல மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் 94 பேருக்கு முடித்திருத்தம் முகச்சவரம்  செய்து   தூய்மைப் பணி செய்துள்ளனர்,

இதனைத் தொடர்ந்து இன்றும் திருப்பூர் சேவா சமிதி சங்கத்தில் தங்க வைத்துள்ள 64 பேருக்கும் முடித்திருத்தம் முகச்சவரம் செய்தனர். சேவைப் பணியில் கலந்து கொண்டோர் அறக்கட்டளை நிறுவனர் ந. தெய்வராஜ், உறுப்பினர்கள்: சண்முகராஜ், செல்வராஜ், பிரேம் குமார், பிரவீன் குமார் ஆகியோர் ஈடுபட்டனர். 

நிர்வாகி  - ந. தெய்வராஜ் - நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை திருப்பூர் - செல்: 9442372611.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.