# DINAVEL NEWS TODAY # மதுரை வாடிப்பட்டியில் சேவாபாரத் அறக்கட்டளை சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.



மதுரை வாடிப்பட்டியில் சேவாபாரத் அறக்கட்டளை சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா இலக்கம்பட்டியில்  சேவாபாரத் சமூக நல அறக்கட்டளை சார்பாக 23.04.2020 அன்று covid-19 நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது அதில் 25 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, சமையல் மசாலா பொருட்கள் மற்றும்  உடல்நல பாதுகாப்பு  உபகரணங்களாகிய டெட்டால் லிக்யுடு , டெட்டால் சோப்பு , சானிடைசர், முகக்கவசங்கள் போன்றவைகள் இருந்தன. பஞ்சாயத்து தலைவர் திருமதி காயத்ரி இதயச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்  கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கினர். மருத்துவர் சிம்சன் ராஜ் அவர்கள் கொரானா அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வைப் பற்றி பேசினார். தலைமைக் காவலர் திருமதி ரேவதி அவர்கள் தடை உத்தரவை  மீறாமல் வீட்டில் இருந்து அரசாங்க உத்தரவுகளை கடைபிடிக்க  கேட்டுக்கொண்டார். சமூக சேவகர் திரு எஸ்றா தங்கப்பாண்டி அவர்கள் முகக் கவசம் அணிவது அவசியம் குறித்து பேசினார் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் கொரானவை  ஒழிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூக இடைவெளியை பின்பற்றும்படி கேட்டுக்கொண்டார். சமூக சேவகர் திரு சீகன்பால் அவர்கள் தூய்மை மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்து பேசினார் கைகழுவும் விதம் பற்றி அறிவுறுத்தினார்   சமூக சேவகர்  திரு ஆனந்த் அவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்து பொருட்களை வழங்கினார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா