#Dinavel News Today # மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு 

மக்கள் எழுச்சிப் பேரவையின் கோரிக்கை: என்னவென்றால் கொரானா வைரஸ் எதிரொலியால் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது இந்நிலையில் மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சென்று வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் ஸ்டாண்டில் அமைந்திருக்கும் **அம்மா உணவகம்** செயல்பட்டு வருகிறது ஏழை மக்களுக்கு சவுகரியமாக இருந்து வருகிறது குறைந்த கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொண்டு உணவு அருந்தி வருகிறார்கள் ஆனால் சாதுக்களும் ஆதரவற்றவர்களும் ஏழை மக்களும் அந்தக் குறைந்த கட்டணம் செலுத்தி டோக்கன் பெறுவதற்கு மிகவும் வருமை காரணமாக தள்ளப்பட்டு வருகிறார்கள் மக்கள் நடமாட்டம் மனிதநேயம் உள்ளவர்கள் வெளியே வந்து சென்றால் தான் அவர்களுக்கு நாம் (தர்மம் செய்ய முடியும் இந்த தர்மம் பணத்தினால் தான் அவர்கள் அம்மா உணவகம் சென்று உணவு அருந்த முடியும்) இன்னும் கொரானா தாக்கம் நீடித்துக் கொண்டே இருப்பதால் சில நபர்கள் பணமில்லாமல் உணவில்லாமல் உடல்நிலை சரியில்லாமலும் உயிர்விடும் நிலையில் இருந்து வருகின்றன இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐயா அவர்கள் கவனம் செலுத்தி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அம்மா உணவகத்திற்கு வரும் ஆதரவற்றவர்களுக்கு இந்த கொரானா தாக்கம் முடியும் வரைக்கும் அவர்களுக்கு இலவசமாக உணவு அளிக்க வேண்டும் என மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. மற்றும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவனம் செலுத்தி இலவச உணவு கொடுக்க முன்வரவேண்டும் என மனித நேயத்துடன் கேட்டுக்கொள்கிறோம்... என்றும் மக்கள் பணியில் மனிதநேயத்தின் மக்கள் எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் :G.நாகுஜி, திண்டுக்கல் மாவட்டம் பழனி

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா