DINAVEL NEWS TODAY # மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் சேவாபாரத் சமூக நல அறக்கட்டளை சார்பில் உணவு பொருள் வழங்கப்பட்டது.



மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் சேவாபாரத் சமூக நல அறக்கட்டளை சார்பாக 21.04.2020 அன்று covid-19 நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது அதில் 25 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, சமையல் மசாலா பொருட்கள் மற்றும்  உடல்நல பாதுகாப்பு  உபகரணங்களாகிய டெட்டால் லிக்யுடு , டெட்டால் சோப்பு , சானிடைசர் போன்றவைகள் இருந்தன. நிவாரண பறக்கும்படை குழுவின் பொறுப்பாளர் தாசில்தார் திரு பாலாஜி அவர்கள் இதனைத் தொடங்கி வைத்தார். மருத்துவர் அருள் கென்னத் அவர்கள் கொரானா அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வைப் பற்றி பேசினார். தலைமைக் காவலர் திரு.பவுன்ராஜ் அவர்கள் தடை உத்தரவு பற்றியும் அதை மீறாமல் இருக்கும் படியாகவும் பேசினார். சமூக சேவகர் திரு எஸ்றா தங்கப்பாண்டி அவர்கள் சமூக இடைவெளி அவசியம் குறித்து பேசி சமூக இடைவெளியை பின்பற்றும்படி அறிவுறுத்தினார். சமூக சேவகர் Dr. நாகராஜன் அவர்கள் அதில் கலந்துகொண்ட சுமார் 100 பேர்களுக்கு முகக் கவசங்கள் கொடுத்து கை கழுவுதல் அவசியம் பற்றி  பேசி அதை பின்பற்ற  வலியுறுத்தினார் சமூக சேவகர்  திரு மோசஸ்  மலைச்சாமி அவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.