சேலம் கந்தம்பட்டி யில் காற்று நிரப்பும் கம்ப்ரஸர் சிலிண்டர் வெடித்ததில் பள்ளி மாணவன் கை துண்டிப்பு



சேலம் மாவட்டம் கந்தம்பட்டி யில் காற்று நிரப்பும் கம்ப்ரஸர் சிலிண்டர் வெடித்ததில் பள்ளி மாணவன் கை துண்டானது



8-11-2019 இன்று காலை சுமார் 9 மணி அளவில் சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் அருகில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் பட்டறை உள்ளது  சம்பவ நேரத்தில் பட்டறை ஊழியர்கள் கண்டனர் லாரிக்கு காற்று பிடிக்கும் போது கம்ப்ரசர் சிலிண்டர் வெடித்து சிலிண்டரின் ஒருபக்க மூடி கழன்று அருகிலிருந்த கன்டெய்னர் லாரியில் அடித்து  சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள ஓடு வீட்டில் விழுந்ததில் அந்த வீட்டில் பள்ளிக்கு செல்ல தயாராகி சாப்பிட்டு கொண்டிருந்த 5 ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மௌலீஸ்வரன் மேல் விழுந்ததில் அவன் கை துண்டாகி போனது மேலும் அவனது சகோதரன்ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்  லித்திக் கிற்கும் பலத்த அடிபட்டது அங்கிருந்தவர்கள் அடிபட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பஞ்சர் பட்டறை ஊழியர்கள் உட்பட 5 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர் மேலும் தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . ஆயில் என்ஜின் மூலம் கம்ப்ரசர் சிலிண்டருக்கு காற்று நிரம்பியதால் இப்படி நடந்திருக்கும் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா