# DINAVEL NEWS # கடையநல்லூரில் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி.



கடையநல்லூரில் 
சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர் மீது  மோட்டார் சைக்கிள் மோதி  பலி.

 
கடையநல்லூர்

கடையநல்லூரில்  நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர் மீது  மோட்டார் சைக்கிள் மோதி  பலியானார்  


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட  கடையநல்லூர்  இக்பால் நடுத்தெருவை சேர்ந்த முகம்மது ஹனீபா மகன் சாகுல்ஹமீது (51) நேற்று காலை 6 மணி அளவில் தனது நண்பருடன் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் வரை நடை பயிற்சியில் ஈடுபட்டு  புதிய பேருந்து நிலையம்  அருகே திரும்பி வரும்போது வடக்கே புளியங்குடியில் இருந்து இடைகாலை  நோக்கி பைக்கில் வந்த பாலமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த ராமையா மகன் வேலுசாமி என்பவர்  மோட்டார் சைக்கிளில் இரவு வேலையை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்   அப்பொழுது  அதே திசையில் தெற்கே இருந்து வடக்கே வந்த சாகுல்ஹமீது மீது  மோதினார் இதில் தூக்கி வீசப்பட்ட  சாகுல் ஹமீது  படுகாயமடைந்தார்  அப்போது அவருடன் வந்தவர் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார் அங்கே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர்  திருநெல்வேலி சந்திப்பு  தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர்  ரூ150,000 பணம் கொடுத்தும் அங்கு  சிகிச்சை பலன் இல்லாததால் மீண்டும் பணம் கேட்டதால்  அவரை நேற்று இரவு  பாளையங்கோட்டை அரசு மருத்துவகல்லூரி  மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு இன்று காலை 6 மணியளவில் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்    இதுகுறித்து  கடையநல்லூர்  போலீசார்  வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேலுச்சாமியிடம் விசாரணை நடத்தி வருகிறது  விபத்தை ஏற்படுத்திய வேல்சாமி  புளியங்குடியில்  காவல் நிலையத்தில் போலீசாராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இறந்த சாகுல் ஹமீதுக்கும்  மனைவி மற்றும் 3 ஆண் குழந்தைகள் உள்ளது

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா