Posts

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

Image
கன்னியாகுமரி அரசுபழத்தோட்டத்தில் தயாராகும் சாக்லேட்  கன்னியாகுமரி டிச 10 கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது  சாக்லேட்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி சாப்பிடும் இனிப்பு வகை.5 ரூபாயிலிருந்து தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை அதன் தரவரிசை உள்ளது.சர்வதேச நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சாக்லேட்க்கள்,பெருநகரம் தொடங்கி குக்கிராமம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கண்ணைகவரும் பேக்கிங்,சுவை,விளம்பரம் என ஆண்டுக்கு கோடிகணக்கான ரூபாய்க்கு சாக்லேட் வர்த்தகம் நடக்கிறது. ஆனால் சர்வதேச தரத்தில் தயாராகும் இந்த சாக்லேட்டுக்கு இணையாக நமது ஊரில் சப்தமின்றி தயாராகிறது. கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் தனியாக யூனிட் அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற பெண் ஊழியர்களால் சுகாதாரமான தயாரிக்கபடுகிறது.சர்வதேச கம்பெனி போல் எந்த ஒரு விளம்பரம் இல்லாமலேயே பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த சாக்லேட். இதுகுறித்து கன்னியாகுமரி அரசுபழத்தோட்ட மேலாளர் கூறியதாவது:- தமிழக அரசின் தோட

DINAVEL DAILY # குமரி அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.! விஜிலா சத்தியானந்த் எம்.பி பங்கேற்றார்

Image
குமரி அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!  விஜிலா சத்தியானந்த் எம்.பி பங்கேற்றார்; கன்னியாகுமரி:டிச 10 குமரி மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக விஜிலா சத்தியானந்த் எம்பி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.  கூட்டத்தில் 2021சட்டமன்ற தேர்தலை மகளிர் அணி சார்பில் எவ்வாறு எதிர்கொள்வது எனவும், அதிமுக அரசின் சாதனைகளை அனைத்து இல்லங்களுக்கும் மகளிரணி சார்பில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ,மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜான் தங்கம் மாவட்ட மகளிரணி செயலாளர் கெப்சி பாய், வர்த்தக அணி, மாவட்டச் செயலாளர் ஜெஸீம் ஒன்றியச் செயலாளர்கள் அழகேசன்,கிருஷ்ணகுமார், பேரூர் செயலாளர்கள் ராஜபாண்டியன், மனோகரன், சீனிவாசன், இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் லட்சுமி சீனிவாசன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

DINAVEL DAILY # குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உழவர் விழா தென் தாமரைகுளத்தில் நடைபெற்றது

Image
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உழவர் விழா தென் தாமரைகுளத்தில் நடைபெற்றது.   கன்னியாகுமரி டிச 10 கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏராளமான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிசான் கோஸ்திஸ் உழவர் விழா தென் தாமரைக்குளத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வேளாண்மை துணை இயக்குனர் (அட்மா திட்டம்) அவ்வை மீனாட்சி தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியை செல்வராணி, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் அப்துல் ரசாக், அகஸ்தீஸ்வரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சரண்யா, அகஸ்தீஸ்வரம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன், வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு என்னென்ன உரங்களை எவ்வெப்போது இட வேண்டும் என்பது குறித்தும், பயிர்கள் மற்றும் மரங்களை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள் குறித்தும், அவற்றை எவ்வாறு அழிப்பது என்பது குறித்தும், விவசாயி

DINAVEL DAILY # பள்ளியாடியில் தமிழக காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

Image
பள்ளியாடியில் தமிழக காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம். கன்னியாகுமரி டிச: 10  தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74வது பிறந்த நாள் விழா கட்சிக் கொடி ஏற்றி,₹ இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி குமரி கிழக்கு மாவட்ட தலைவர் பென்றசல் தலைமை தாங்கினர்.சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.  நிகழ்ச்சியில் வாள்வச்சகோஷ்டம் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் டைன்ஸ் குமார் முன்னிலை வகித்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜாய் போன், முளகுமுடு பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

DINAVEL DAILY # குமரி மாவட்ட போலீசார் சார்பில் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரே நடித்த குறும்படத்தை குமரி மாவட்ட காவல்துறை கட்காணிப்பாளர் வெளியிட்டார்.

Image
கன்னியாகுமரி: டிச 10 குமரி மாவட்ட  போலீசார் சார்பில் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரே நடித்த குறும்படத்தை குமரி மாவட்ட காவல்துறை  கட்காணிப்பாளர் வெளியிட்டார்.  நமது நாட்டில் வளர்ந்து வரும் புதிய நவீன தொழில்நுட்பத்தோடு அவற்றை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்களும் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றது.  வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடியாக திருடுவது, சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக தினந்தோறும் காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  இதை கருத்தில் கொண்டு குமரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை வெளியிட்டுள்ளது. காவல்துறையினரே நடித்த இந்த குறும்படத்தை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் இன்று வெளியிட்டார். இந்த குறும்படத்தில், பொது மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது எனவும், அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வோடு இருப

DINAVEL DAILY # லீபுரம் கடற்கரையில் கலங்கி நிற்கும் மன்னர்கால கலங்கரை விளக்கம். கண்டுகொள்ளுமா அரசு? சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

Image
லீபுரம் கடற்கரையில் கலங்கி நிற்கும் மன்னர்கால கலங்கரை விளக்கம். கண்டுகொள்ளுமா அரசு?  சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.  கன்னியாகுமரி டிச 10 சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் லீபுரம் என்னும் கடற்கரை கிராமம் உள்ளது. இந்தக் கிராமமானது கன்னியாகுமரி முக்கடல் பகுதிக்கும் வட்டக்கோட்டை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. வட்டக்கோட்டை பகுதியானது மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கடல் பகுதி ராணுவ கோட்டையாகச் செயல்பட்டுவந்தது. இந்தக் கடல் கோட்டையிலிருந்து கடல் வழியாக எதிரிகள் வருகிறார்களா? எனத் திருவிதாங்கூர் கடற்படை வீரர்கள் கண்காணித்துவந்தனர். அதேபோல இந்தக் கோட்டைக்கும், கன்னியாகுமரிக்கும் இடையில் உள்ள லீபுரம் பகுதியில் சிறிய அளவிலான துறைமுகம் செயல்பட்டுவந்தது. ஸ்ரீஇதற்குச் சான்றாக இன்றும் அந்தப் பகுதியில் பழங்கால எச்சங்களைக் சுமந்த படி காட்சி அளிக்கிறது சிறிய அளவிலான கலங்கரை விளக்கம். இந்த லீபுரம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக தோணியில் வாணிபம் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக இங்கிருந்து இலங்கைக்கு கருப்பட்டி, புகையி

DINAVEL DAILY # கன்னியாகுமரி மாவட்டம் கொல்லம்கோடு அருகே மேற்கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோ வாலிபர் கைது புகாரின் பேரில் பொறி வைத்து பிடித்த போலீசார்

Image
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லம்கோடு அருகே மேற்கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோ வாலிபர் கைது புகாரின் பேரில் பொறி வைத்து பிடித்த போலீசார் கன்னியாகுமரி டிச 10 கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நித்திரவிளை சுற்றுவட்டார பகுதி வீடுகளில் நள்ளிரவு வீட்டின் மாடி வழியாகவும் கதவை திறந்தும் வீட்டிற்குள் புகும் மர்ம நபர் அயர்ந்து தூங்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் அவர்கள் சத்தம் போடவே அந்த மர்ம நபர் தப்பியோடும் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தது ஆனால் அந்த பகுதி மக்கள் நகை பணம் திருடும் நோக்கத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகாரளிப்பதோடு பெரிது படுத்தாமல் இருந்து வந்தனர் இந்நிலையில் கடந்த 6-ம் தேதி காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி இன்பசாகரன் தனது வீடு பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன மேற்கூரை அமைத்த வீட்டில் தனது மனைவியுடன் ஒரு அறையிலும் தனது 16-வயதான மகளையும் 12-வயதான மகனையும் பக்கத்து அறையும் தூங்க வைத்துள்ளார் இந்நிலையில் அன்றிரவு பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந