DINAVEL DAILY # திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்:-

உலகெங்கும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி தற்போது இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் முயற்சியால் நாளுக்குநாள் தொற்று குறையத் துவங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நோய் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த ஒரு வார காலமாக நூறுக்கும்குறைவாகவே இருந்த கொரோனா தொற்று தற்போது 73 நபர்களுக்கு நேற்று புத்தாக தோற்று உறுதியாகியுள்ளது என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 924 பேருக்கு தோற்று உறுதியாகி குணமாகி உள்ளனர் தற்போது 73 நபர்களும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.திருப்பூர் செய்தியாளர்:மா.துரை.T.யோகராஜ்

Comments