DINAVEL DAILY # குமரி மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.


கன்னியாகுமரி: டிச 10

குமரி மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது .

அதன்படி முதுகலை ,பாலிடெக்னிக், தொழிற் படிப்பு போன்ற படிப்புகளுக்கு மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. மேலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் படிவத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே பெற்று கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். 

எனவே கல்வி நிறுவனங்கள் புதுப்பித்த கல்வி உதவித்தொகைக்கு வருகின்ற 31ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் .

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.