DINAVEL DAILY # கன்னியாகுமரி மாவட்டம் கொல்லம்கோடு அருகே மேற்கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோ வாலிபர் கைது புகாரின் பேரில் பொறி வைத்து பிடித்த போலீசார்


கன்னியாகுமரி மாவட்டம் கொல்லம்கோடு அருகே மேற்கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோ வாலிபர் கைது புகாரின் பேரில் பொறி வைத்து பிடித்த போலீசார்

கன்னியாகுமரி டிச 10
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நித்திரவிளை சுற்றுவட்டார பகுதி வீடுகளில் நள்ளிரவு வீட்டின் மாடி வழியாகவும் கதவை திறந்தும் வீட்டிற்குள் புகும் மர்ம நபர் அயர்ந்து தூங்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் அவர்கள் சத்தம் போடவே அந்த மர்ம நபர் தப்பியோடும் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தது ஆனால் அந்த பகுதி மக்கள் நகை பணம் திருடும் நோக்கத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகாரளிப்பதோடு பெரிது படுத்தாமல் இருந்து வந்தனர் இந்நிலையில் கடந்த 6-ம் தேதி காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி இன்பசாகரன் தனது வீடு பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன மேற்கூரை அமைத்த வீட்டில் தனது மனைவியுடன் ஒரு அறையிலும் தனது 16-வயதான மகளையும் 12-வயதான மகனையும் பக்கத்து அறையும் தூங்க வைத்துள்ளார் இந்நிலையில் அன்றிரவு பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த தனது மகள் அலறும் சத்தம் கேட்டு அங்கு ஓடோடி சென்ற போது அந்த அறையில் இருந்து மர்ம நபர் ஒருவர் தப்பியோடினார் இதனை கண்ட இன்பசாகரன் அந்த நபரை பின் தொடர்ந்து விரட்டவே அந்த நபர் சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் தப்பி சென்றார் ஆட்டோ எண்ணை நியாபகம் வைத்துக்கொண்ட இன்பசாகரன் மகளிடம் வந்து விசாரித்த போது அந்த நபர் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது இதனையடுத்து ஆட்டோ எண்ணுடன் அவர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த 40-வயதான ஆட்டோ டிரைவர் சுரேஷ்பாபு என்பது தெரியவந்தது இதனையடுத்து அவரை கைது செய்ய போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போது நேற்று நித்திரவிளை பகுதியில் வீடுகளை வேவு பார்த்த போது மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர் விசாரணையில் அவர் பல பெண்களுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதும் பகல் வேளையில் டிப்-டாப்பான ஆட்டோ டிரைவராக வலம் வரும் இவர் நள்ளிரவு நேரம் குடிபோதையில் பெண்கள் அயர்ந்து தூங்கும் போது வீடுகளுக்குள் புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபடும் சைக்கோ என்பதும் பெண்கள் தொடர்பாக வழக்குகளும் அடிபிடி வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது இதனையடுத்து அவரை கைது செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து நாகர்கோவில் மகிழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்தனர் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது

நள்ளிரவு வீடுகளில் புகுந்து பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சைக்கோ வாலிபர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா