DINAVEL DAILY # கண்டமங்கலம் அருகே ஆற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி. கண்டமங்கலம் செய்தியாளர் கி.வேலு


கண்டமங்கலம் அருகே ஆற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கெண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் குமார்( 44) இவர் தான் வளர்த்துவந்த மாடுகளை மேய்பதர்க்கு அருகில் உள்ள பம்பையாற்றின் கரையோரம் ஓட்டி சென்றுள்ளார். அப்போது பம்பையாற்றின் ஓரம் சென்ற மாடுகள் ஆற்றில் தண்ணீர் அருந்த சென்றுள்ளது  இதனையடுத்து அந்த மாடுகளை ஓட்டுவதற்காக குமார் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக கரை சரிந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  உடனடியாக சின்னபாபு சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர்வினோத்குமார் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வு செய்வதற்கு அனுப்பி வைத்தனர்.  இவருக்கு விஜி (36)என்கின்ற மனைவி,  நரேஷ் (16), நர்மதா (15), நந்தினி (11)ஆகிய பிள்ளைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கண்டமங்கலம் செய்தியாளர் கி.வேலு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா