DINAVEL DAILY # நாகியம்பட்டி கிராமத்தில், சாலைகளில் நடந்து செல்லக்கூட வழியின்றி, சேறும் சகதியுமாக இருப்பதால், கறுப்பு கொடிகளுடன், பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நாகியம்பட்டி கிராமத்தில், சாலைகளில் நடந்து செல்லக்கூட வழியின்றி, சேறும் சகதியுமாக இருப்பதால், கறுப்பு கொடிகளுடன், பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெங்கவல்லி ஒன்றியம், நாகியம்பட்டி ஊராட்சி, ஏ.டி., காலனி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை, பல ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தற்போது பெய்த மழையால், சாலை முழுவதும் ஏர் உழுதது போன்று சேறும், சகதியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் பலரும் அந்த வழியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் பல முறை கெங்கவல்லி ஒன்றியம், நாகியம்பட்டி ஊராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, அப்பகுதி பெண்கள், கறுப்பு கொடிகளை ஏந்தி வந்து, சேற்றில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.