DINAVEL DAILY # விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

திமுகவினர் இராஜபாளையத்தில் போலீஸ் அதிகாரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கலவரத்தில் ஈடுபட்டனர் 

முதல்வர் எடப்பாடி அவர்களையும் அம்மா அவர்களையும் தரக்குறைவாக பேசுவதற்காக திமுக தலைமை சொல்லியே இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார் அவராக பேசவில்லை முதலமைச்சரை சவால் விடும் அளவிற்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்கள் திறமைசாலி அல்ல இவர் இங்குள்ள ஒரு அதிமுக உறுப்பினர்களுடன் போட்டி போடட்டும் 

திமுக வன்முறைக் கலாச்சாரத்தை கையில் எடுப்பது இன்று நேற்று அல்ல காலகாலமாக திமுக வன்முறை கால சரத்தை கையில் எடுக்கிறது 

அண்ணாவின் மறைவிற்குப் பின்பு கலைஞர் தலைமையில் வன்முறை கலாச்சாரம் காலகாலமாக கையில் எடுக்கப்பட்டு வருகிறது அதை தற்போது ஸ்டாலினும் வன்முறையை முழுமையாக நம்புகிறார் அதை கையில் எடுத்து வருகிறார்

அன்னை இந்திரா காந்தி மதுரைக்கு வந்த போது கைது செய்து ரத்தம் சொட்டசொட்ட அடித்து கட்சிதான் திமுக அதற்கு பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டபோது பெண்கள் என்றால் மாதவிடாய் காலம் இரத்தம் வரத்தான் செய்யும் என பெண்களை இழிவாக பேசியவர்தான் கலைஞர் 

திமுகவிற்கு வன்முறைக் கலாச்சாரம் புதிதல்ல அண்ணாவின் மறைவிற்குப் பின்பு திமுக எடுத்த பாதை வன்முறை பாதைதான் திமுக வருகின்ற 2021 படுதோல்வி அடையும் அதன் எடுத்துக்காட்டுதான் இராஜபாளையம் நடந்த வன்முறை கலாச்சாரம் மக்கள் விழிப்புணர்வாக இருக்கின்றனர் திமுகவின் அராஜக போக்கை பார்க்கும் பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் பதில் அளிப்பார்கள் 

தேர்தல் தோல்வி பயத்தில்
திமுக வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுகிறது 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அப்பொழுது உதயகுமார் என்ற மாணவன் பிணத்தின் மீதுதான் டாக்டர் பட்டம் பெற்றார் கலைஞர்

 திமுக வரலாரே வன்முறை தான் திமுகவும் வன்முறையும் இரட்டை குழல் துப்பாக்கி போன்றது வன்முறை கட்சியான திமுக படுதோல்வி அடையும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்

சாதிக் பாட்சாவின் மனைவி கண்ணீர் விட்டு பேட்டி அளிக்கிறார் 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் கோபாலபுரத்தில் ஸ்டாலினை சந்திக்கிறார் அதற்கு ஒரே ஒரு சாட்சி சாதிக்பாட்சா நேரில் சந்தித்த சாதிக் பாட்சா CBI யிடம் உன்மையை கூறியுள்ளார் அந்த மன அழுத்தத்தில் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவருடைய தற்கொலைக்கு காரணம் ஸ்டாலினும் அ.ராசாவும் தான்

இஸ்லாமிய ஓட்டுக்களை வாங்குவதற்காக பொய் சொல்லி வரும் திமுக இனிமேலும் இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது இஸ்லாமிய பெண்மணி வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும் தமிழக அரசும் ஜனாதிபதியும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சாதிக் பாட்சா மனைவி கோரிக்கை வைத்துள்ளார்

ஜனநாயகத்தை பற்றியோ அம்மாவின் ஆட்சியை பற்றியோ எடப்பாடி பற்றியும் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள் திமுகவினர் சொந்தக் கட்சிக்காரர்களே காப்பாற்ற வழி இல்லை இவர்கள் எங்களைப் பற்றி குறை சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை என கூறினார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.