DINAVEL DAILY # குமரி மாவட்ட போலீசார் சார்பில் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரே நடித்த குறும்படத்தை குமரி மாவட்ட காவல்துறை கட்காணிப்பாளர் வெளியிட்டார்.


கன்னியாகுமரி: டிச 10

குமரி மாவட்ட  போலீசார் சார்பில் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரே நடித்த குறும்படத்தை குமரி மாவட்ட காவல்துறை  கட்காணிப்பாளர் வெளியிட்டார். 

நமது நாட்டில் வளர்ந்து வரும் புதிய நவீன தொழில்நுட்பத்தோடு அவற்றை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்களும் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடியாக திருடுவது, சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக தினந்தோறும் காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

 இதை கருத்தில் கொண்டு குமரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை வெளியிட்டுள்ளது. காவல்துறையினரே நடித்த இந்த குறும்படத்தை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் இன்று வெளியிட்டார்.

இந்த குறும்படத்தில், பொது மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது எனவும், அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் எனவும் காட்சிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த குறும்படத்தை உதவி ஆய்வாளர் திலிபனும், சக போலீசாரும் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தை இயக்கி நடித்த 25 போலீசாருக்கு மாவட்ட எஸ்பி  சான்றிதழ்களை வழங்கி கொளரவித்தார்.மேலும் எந்த ஒரு விஷயங்களுக்காகவும் பொதுமக்கள் காவல்துறையை தொடர்ப்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.