DINAVEL NEWS - கழிவறைக்குள் தற்கொலை செய்துகொண்ட காவலர் : பின்னணி என்ன ?


கழிவறைக்குள் தற்கொலை செய்துகொண்ட காவலர் : பின்னணி என்ன ?


திருப்பத்தூரில் வங்கியின் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்த நபர் கழிவறைக்குள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

 மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அரட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்.
இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். 

இதைத்தொடர்ந்து திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த 3 ஆண்டுகளாக பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்தார். 

இந்தியன் வங்கியில் உள்ள பாதுகாவலர்களுக்கான அறையில் தங்கியிருந்த இவர், இன்று காலை வழக்கம்போல கழிவறைக்குள் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் கழிவறைக்குள் இருந்து பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது.

 உடனே சக ஊழியர்கள் பதட்டத்துடன் ஓடி கதவைத் திறந்து பார்த்துள்ளனர். 

உள்ளே யோகேஸ்வரன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்துள்ளார்.

 இதைக்கண்டு அதிர்ச்சியடந்த சக ஊழியர்கள், வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வங்கி மேலாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

 சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா