DINAVEL NEWS - அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டு செல்லும் சொத்து தானே ..நீர் நிலைகள்.


இப்போது புனித நதியை சண்முக நதியை..சுத்தப்படுத்தும் பணியில்.....
அமலை செடிகளை அகற்றும் பணி.....
இன்று  நண்பர்கள்,சகோதரர்கள்,மற்றும் இளைய தலைமுறை மாணவர்களுக்கு பழநி ஆண்டவர் ஆசியோடு..வாழ்த்துக்களையும் சொல்ல கடமைப்பட்டு உள்ளேன்.....

இன்று கிர்த்திகை..பழநி ஆண்டவருக்கு சிறப்பு நாளில்...சிறப்பான பணி....

சண்முக நதியை தூய்மைப்படுத்தும் அமைப்பு பழநியில் கடந்த ஒரு வருடமாக சிறப்பாக செயல்பட்டு இன்று பக்தர்கள்..ஆற்றில் நீராடி...இறைவனை தரிசனம் செய்யும் பணி ..மிக சிறப்பான வேலைப்பாடுகள் செய்தார்கள்...வாழ்த்துக்கள்...
ஒரு பொதுப்பணி குழுவோ,இல்லை அரசாங்கமோ..செய்ய வேண்டும் என்பது இல்லை.....

கூட்டு முயற்சி..அல்லது..எல்லாருக்கும் கடமை இருக்கிறது..நமது ஊர்,நமது நதி....அதை சுத்தமாக வைத்துக் கொள்வது நம் கடமை..தானே நண்பர்களே

இன்றும் சண்முக நதியில் பிளாஸ்டிக்,பாட்டில்,மற்றும் பழைய துணிகளை போட்டு விடுகிறார்கள் அதை தவிர்க்க வேண்டும்....
குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது நாம் பழநி மக்கள்.ஒரு சிறுப்பணி செய்யலாம்....
அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டு செல்லும் சொத்து தானே ..நீர் நிலைகள்.  
நீர் நிலைகளை பாதுகாப்போம்...

இன்று பணியில் அனைவருமே..கடினப் பணி செய்தார்கள்..பாராட்டுங்கள்...இன்னும் இரண்டு,மூன்று பணி செய்யும் போது...சண்முக நதியின் தென் பகுதி முழுதும் சுத்தம் ஆகி விடும்......

புண்ணிய நதியில் நீராடி...மன மகிழ்வுடன் பக்தர்கள்..செல்வார்கள்...

இன்று பணியில் கலந்து கொண்ட..நண்பர்கள்..முத்துராஜ் ஜீ,பிரேம் ஜீ,மணாளன்..ஜீ,தியாகராஜன்  பொன்ராஜ்,மற்றும் நாகராஜ்,...அடுத்த தலைமுறை மாணவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

மழை வேண்டி பிராத்தனை செய்வோம். வாழ்த்துக்களுடன் பழனி வாழ்மக்கள்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.