Dinavel News - வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் அமைந்துள்ள ஜெ.எஸ்.ஏ வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் தானுநாதன் தலைமை தாங்கினார் கல்லூரியின் இயக்குனர் நடராஜன் முன்னிலை வகித்தார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மங்களூர் வட்டார மருத்துவ அதிகாரி கலைச்செல்வி தலைமையிலான மருத்துவ  அலுவலர்கள் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள்  குறித்தும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதனை எதிர்கொள்ளும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து செயல்விளக்கம் காண்பித்தார்  நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் துரைராஜ் ராஜபிரபு சங்கர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்  ராவ்கெலுஸ்கர்  ஒருங்கிணைத்தார்.

பாசார் செல்வேந்திரன்.ம

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.