DINAVEL NEWS TODAY # காட்பாடியில் சித்த மருத்துவரை மிரட்டி பணம் பறித்த 4 நிருபர்கள் கைது



காட்பாடியில் சித்த மருத்துவரை மிரட்டி பணம் பறித்த 4 நிருபர்கள் கைது

வேலூர்மாவட்டம், காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் விஜயலட்சுமி (40) , இவர் தொடர்ந்து அப்பகுதியில் சித்த வைத்தியம் பார்த்து வருகிறார்.

 மேலும் நீரிழிவு உள்ள நோயாளிகள் தங்களுக்கு இன்சூலின் ஊசியை போட வேண்டுமென்றால் நீரிழிவு நோயாளிகள் மருந்துகளை வாங்கி வந்து அவர்களாகவே ஊசி போட்டு செல்வது வழக்கம்.

  இதனை அறிந்த பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த செய்தி அலசல் என்ற நாளிதழில் பணிபுரியும் விஜயகுமார், காளிமுத்து, தென்னரசு ஆகியோர் இதுகுறித்து வரலாறு நாளிதழின் நிருபர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆனந்த சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 அவர் இவர்களுடன் இணைந்து சித்த மருத்துவரான விஜயலட்சுமியை  மிரட்டி ரூ.12500 பணம் பெற்றுகொண்டு சென்றுள்ளனர். இதனை விஜயலட்சுமி  ரகசியமாக தனது கைபேசியில் பதிவு செய்து இவர்கள் குறித்த புகாரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விஜயலட்சுமி  வீடியோ ஆதாரத்துடன் அனுப்பியுள்ளார்.

 இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காட்பாடி போலீசார் மிரட்டி பணம் பறித்த நிருபர்கள் விஜயகுமார், காளிமுத்து, தென்னரசு, ஆனந்த சீனிவாசன் ஆகிய 4 பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

294 (B) , 417, 420 , 384 , 506(1)  Women harrasement Act ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா