# DINAVEL NEWS # ஆம்பூரில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு பெண் கைது ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது.



ஆம்பூரில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு பெண் கைது ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உமராபாத் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும் அதிமுக பெண் பிரமுகருமான பிரேமா  மற்றும் பெங்களூரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய் லதா ஆகியோர் 31.01.2020 அன்று கைது செய்தனர் இந்நிலையில் அதிமுக  கட்சியில் பிரேமா வகித்து வந்த மாவட்ட பிரதிநிதி பொறுப்பிலிருந்து  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இவரை நீக்கி உத்தரவிட்டனர் மேலும் வேலூர்  காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்த லட்சுமியை தேடி வந்த நிலையில் இன்று லட்சுமியின் செல்போன் எண்ணை சிக்னல் வைத்து கண்டுபிடித்த தனிப்படை போலீசார் லட்சுமியை ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது செய்தனர் பின்னர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த தனிப்படை ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலீசார் ஆம்பூரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதன் பெயரில் ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரேமா மற்றும் லட்சுமி ஆகியோர் சிறையில் உள்ள நிலையில் ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி லட்சுமியை தற்போது வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா