தினவேல் செய்திகள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் வருகை




பெருமாநல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு 22-2-2020 ஞாயிறு மதியம் 2 மணிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் வருகை தந்து தான் திறந்து வைத்த பள்ளியை பார்வையிட்டு பள்ளியை ஆய்வு செய்து பள்ளியை நன்றாக வைத்துள்ளீர்கள் என்று பாராட்டி விட்டு, மாணவிகள் அனைவரும் நன்றாகப்படித்து , இப்பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி,இந்த வருடமே இப்பள்ளியை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி விரைவில் உத்தரவிடுவதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயகுமார் அவர்கள், பள்ளி ஆசிரியைகள்,பள்ளி வளர்ச்சி குழு டாக்டர் கோவிந்தராஜ்,உத்தமேஸ்வரன்,  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமதி சரஸ்வதி, முன்னாள் மாணவர்கள் அமைப்பு திரு செந்தில் குமார், முன்னாள்  அமைச்சர் உயர்திரு எம் எஸ் ஆனந்தன், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர், பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.  கிருஷ்ணவேணி, ஈட்டீவீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி  சிவசாமி மற்றும் முருகேஷ், காளிமுத்து, மோகன்ராஜ், ராசப்பன், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா