# Dinavel News # பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி பாதயாத்திரையாக பக்தர்கள் நடைபயணம்.



திண்டுக்கல் மாவட்டம் பழனி  அருள்மிகு  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு  அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி  பாதயாத்திரையாக பக்தர்கள்  நடைபயணமாக ஒரு மாதத்திற்கு விரதமிருந்து மாலை அணிவித்து  08.02.2020  தைப்பூசத் திருவிழாவிற்கு  பாதயாத்திரையாக  காரைக்குடி  திருநெல்வேலி  தூத்துக்குடி புதுக்கோட்டை  திருவண்ணாமலை  எடப்பாடி  கோவை பொள்ளாச்சி உடுமலை பாலக்காடு. திருப்பூர் ஈரோடு  தஞ்சாவூர்  தேவகோட்டை  சென்னை  பாளையங்கோட்டை  ராமநாதபுரம்  இந்த ஊர்களில் இருந்து  பழனிக்கு காவடி எடுத்து நடை பயணம் மேற்கொண்டு  தங்களது நேர்த்திக் கடன்  மொட்டை அடித்தும்  சேவல்  கரும்பு நெல்  நிலக்கடலை தானியங்கள்  காணிக்கை செலுத்தினார்கள்  பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம்  மற்றும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக    பாதயாத்திரை நடந்து வரும் பக்தர்களுக்கு  குடிநீர்  பக்தர்களுக்கு தங்கும் இடம்  காவல்துறை உதவி மையம்  மருத்துவ உதவிகள்   24 மணிநேர  ஆம்புலன்ஸ் வசதிகள் காவல்துறை கண்காணிப்பு கோபுரங்கள்  ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கு தகவல்களை  உடனுக்குடன் அறிவித்து வருகிறார்கள்  கோயிலின் சார்பாக  மலைக் கோயிலில் அன்னதானம்  குடமுழுக்கு மண்டபத்தில்  இசைக்கச்சேரிகள்  ஆன்மீக சொற்பொழிவு  தண்டாயுதபாணி சுவாமி உப கோவிலான இடும்பன் கோவிலில்  பக்தர்களுக்கு வழிநெடுக காவல்துறையினர் உதவி செய்து கொண்டிருக்கின்றார்கள் பக்தர்களின் வசதிக்காக  நடைபயணம் மேற் கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு வழிப்பாதையாக அமைத்து பக்தர்களை பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்வதற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.