# DINAVEL NEWS # துரோணா கல்சுரல் & ஸ்போர்ட்ஸ் அகாடெமியின் சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆய்க்குடி அமர்சேவாசங்க வளாகத்தில் நடைபெற்றது.இதில் தென்காசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.




துரோணா கல்சுரல் & ஸ்போர்ட்ஸ் அகாடெமியின் சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆய்க்குடி அமர்சேவாசங்க வளாகத்தில் நடைபெற்றது.இதில் தென்காசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.  பாவூர்சத்திரம் அசிசி மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை துவக்க பள்ளி மாவட்ட அளவில் யோகா போட்டியில் முதலிடம் வென்றது. கடையநல்லூர் குமந்தாபுரம் கிங் யூனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஸ்கேட்டிங் போட்டியில் இரண்டாம் இடம் வென்றது. இந்நிகழ்சியின் பரிசளிப்பு விழாவிற்கு ஆய்க்குடி அமர்சேவாசங்க பொருளாளர் திருமதி.பட்டம்மாள் தலைமை தாங்கினார். திருமதி.சுலோசனா கிருஷ்ணமூர்த்தி தலைவர்,ஹேண்டிகேர், கனடா பரிசுகளை வழங்கினார்.ஆய்க்குடி அமர்சேவாசங்க மேனேஜர் கிருஷ்ணப்ப பிள்ளை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.யோகா பயிற்சியாளர் காளிப்பாண்டி, வீரக்கலை சுரேஷ், திருநெல்வேலி சிலம்ப பயிற்சியாளர் முஸ்தபா ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினார். ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சங்கரவடிவேலன் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா