# DINAVEL NEWS # திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழா-2020



திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழா-2020

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா இன்று 08.02.2020 -ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு.சண்முக ராஜேஸ்வரன் இ.கா.ப அவர்கள் தலைமையில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.க.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மேற்பார்வையில் தைப்பூசத் திருவிழாவிற்கு 4000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 பக்தர்களின் வசதிக்காக 54 இடங்களில் காவல் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றது.  குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கோவிலின் மேல் பகுதியிலும், கோவிலை சுற்றியும் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அன்னியர்கள் நடமாட்டத்தை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

பக்தர்களின் வழிகாட்டுதலுக்காக பல்வேறு இடங்களில் காவல்துறையினர் மெகா போன்கள் மூலம் பக்தர்களுக்கு அறிவுரைகள் கூறி வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பக்தர்கள் குழு குழுவாக பிரித்து மலை மேல் அனுப்பப்படுகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் காவல் துறையின் அவசர அழைப்பு எண்கள் பதிவிடபட்டுள்ளது. தைப்பூசத் திருவிழாவை பாதுகாப்பான முறையில் நடத்திட திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.