# DINAVEL NEWS # பெற்றோரை பிரிந்த மாணவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.



பெற்றோரை பிரிந்த மாணவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

08.02.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த ராகுல் (16) என்ற மாணவர் தன்னுடைய குடும்பத்தினரை பிரிந்து பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு சென்றவரை மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல்*  அவர்கள் அழைத்து அவரிடம் விசாரணை செய்ததில் அவரது பெற்றோர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும் அவரது தாயார் ஜெயந்தி என்பவர் எனவும் தெரியவந்தது, இதனை அடுத்து  காவல்துறையின் துரித நடவடிக்கையால் மாணவர் அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். மாணவரின் பெற்றோர் காவல்துறையினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.