# DINAVEL NEWS # பெற்றோரை பிரிந்த மாணவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.



பெற்றோரை பிரிந்த மாணவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

08.02.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த ராகுல் (16) என்ற மாணவர் தன்னுடைய குடும்பத்தினரை பிரிந்து பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு சென்றவரை மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல்*  அவர்கள் அழைத்து அவரிடம் விசாரணை செய்ததில் அவரது பெற்றோர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும் அவரது தாயார் ஜெயந்தி என்பவர் எனவும் தெரியவந்தது, இதனை அடுத்து  காவல்துறையின் துரித நடவடிக்கையால் மாணவர் அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். மாணவரின் பெற்றோர் காவல்துறையினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா