DINAVEL NEWS - பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது இக்கேவிலில் வருடா வருடம் மயானக்கொள்ளை திருவிழா.

மயானக்கொள்ளை திருவிழா.




  கடலூர் மாவட்டம்  வேப்பூர்  அடுத்த காட்டுமயிலூர்    கிராமத்தில் சுமார்  3000 க்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர்.

  இந்த கிராமத்தில் பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது இக்கேவிலில் வருடா வருடம்  மயானக்கொள்ளை திருவிழா   நடைபெறுவது வழக்கம்.

 இந்நிலையில் இந்த வருடம் திருவிழா நேற்று  பெரும் விமர்சையாக நடைபெற்றது.

      இத்திருவிழாவில்  பக்தர்கள்     காளி வேடமிட்டு மயானத்தில் வேட்டையாடி வலம் வந்து பின் பொங்கலிட்டு கொண்டாடினார்கள்.


பின்னர் முக்கிய வீதி  வழியாக     ஊர்வலம் வந்து அம்மனுக்கு தீபாரதனை காட்டி வழிபட்டனர்.

இதில் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும்  பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

செய்தியாளர் பாசார் செல்வேந்திரன்.ம

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.