DINAVELMEDIA7 # தேனி மாவட்டத்தில் கோவிட் கேர் சென்டர்களில் பணி செய்தவர்களுக்கு மொத்தம் ரூ.2.30 லட்சம் சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.



29/08/20:தேனி :தேனி மாவட்டத்தில் கோவிட் கேர் சென்டர்களில் பணி செய்தவர்களுக்கு மொத்தம் ரூ.2.30 லட்சம் சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் கொரோனா கேர் சென்டர்கள் 9 செயல்படுகிறது. இதில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலியாக ரூ.1500 வீதமும், பணி முடிந்து அவர்கள் தனிமையில் இருக்கும் போது ரூ.750 வீதம் வழங்குவதாக நியமிக்கப்பட்டனர். இதற்கு தேனி கோபிநாதன் ஆட்களை வழங்கினார். சிகிச்சை மையங்களில் நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கல்லுாரியில் 8 பேருக்கும், குள்ளப்புரம் வேளாண் கல்லுாரியில்8 பேருக்கும் 27 நாட்கள் சம்பளம் ரூ.2.30 லட்சம் வழங்கக்கோரி அப்பணியாளர்கள், கோபிநாதன் தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அவர்கள் கூறியதாவது: கொரோனா நோயாளிகளுக்கு உயிரை பணயம் வைத்து உணவு, மருந்து வழங்கல், சமையல், துாய்மை பணி செய்தோம். தற்போது நீக்கி விட்டனர். பணியாற்றிய நாட்களுக்கு ரூ.2.30 லட்சம் சம்பளம் தரவில்லை. பெரியகுளம் ஒன்றிய அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.