DINAVELMEDIA7 # சென்னை தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.





சென்னை தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.43 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,981 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,951 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 30 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 146 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-83) மூலமாக, இன்று மட்டும் 76,345 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 44 லட்சத்து 98 ஆயிரத்து 706 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா