DINAVELMEDIA7 # கூடுதல் நிவாரணம் வழங்க ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் ...


கூடுதல் நிவாரணம் வழங்க ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் கொரோனா நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
 அறந்தாங்கி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 12 இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட் கள் உள்ளன இந்த சங்கங்கள் வாயிலாக 128 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இருபத்தி நான்காம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது பிறகு அரசின் சார்பில் இரண்டு முறை ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நல வாரிய அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் ரூபாய் 1000 வீதம் வழங்கப்பட்டுள்ளன ஆனால் நலவாரியத்தில் பதிவு செய்யாமல் அதிகம்பேர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர் எனவே இதுகுறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
 மேலும் தற்பொழுது பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதால் நகருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதால் ஆட்டோ தொழில் முடங்கியுள்ளது ஆக ஆட்டோ தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்
 இதுகுறித்து ஏஐடியூசி ஆட்டோ சங்கர் நகர தலைவர் திரு ராஜேந்திரன் அவர்கள் கூறுகையில் அறந்தாங்கி நகரில் உள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளர்களையும் கணக்கெடுத்து பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


தின வேல் செய்திகளுக்காக

புதுக்கோட்டை நிருபர்
சுகுமார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா