DINAVELMEDIA7 # தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்.




தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்: திருப்பூர் தமிழகத்தில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடைபெறும் சாதி ரீதியிலான தாக்குதல்களை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்வேறு ஊராட்சி மன்றங்களில் தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது சாதிய ரீதியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் வரக் கூடிய சூழ்நிலையில் ஒரு சில புகார்கள் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உடனடியாக தமிழக அரசு இப்பிரச்சனையை தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக மக்கள் பணியாற்ற பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணியின் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் செய்தியாளர்கள். மா.துரை. T யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.