DINAVELMEDIA7 # தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்.




தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்: திருப்பூர் தமிழகத்தில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடைபெறும் சாதி ரீதியிலான தாக்குதல்களை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்வேறு ஊராட்சி மன்றங்களில் தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது சாதிய ரீதியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் வரக் கூடிய சூழ்நிலையில் ஒரு சில புகார்கள் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உடனடியாக தமிழக அரசு இப்பிரச்சனையை தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக மக்கள் பணியாற்ற பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணியின் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் செய்தியாளர்கள். மா.துரை. T யோகராஜ்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா