DINAVELMEDIA7 # தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழையின்றி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.



தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழையின்றி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
*நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.75 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 334 கன அடியாகும். தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4428 மில்லியன் கன அடியாகும். தென்மேற்கு பருவ மழையால் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக ஆக. 13 ல் 137 அடியை எட்டியது. கடந்த 17 நாட்களில் 8 அடிக்கும் மேல் நீர்மட்டம் குறைந்துள்ளது.
*நீர்பிடிப்பில் தொடர்ந்து மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்திறப்பை குறைக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வைகை அணை நீர்மட்டம் 58.92 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 1356 கன அடியாகவும், நீர்திறப்பு 72 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 3406 மில்லியன் கன அடியாகும்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.