DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் : மத்திய அரசு பட்டு வளர்ப்பை அதிகரிக்க 'ஒரு உற்பத்தி, ஒரு மாவட்டம்' என்ற புதிய திட்டத்தை தேனியில் துவங்கப்பட்டு உள்ளது.
12/09/20:தேனி மாவட்டம் : மத்திய அரசு பட்டு வளர்ப்பை அதிகரிக்க 'ஒரு உற்பத்தி, ஒரு மாவட்டம்' என்ற புதிய திட்டத்தை தேனியில் துவங்கப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டத்தில் பட்டு புழு வள வளர்ப்பதில் மாநிலத்தில் பட்டு வளர்ப்பில் தேனி 2வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் 600ஏக்கரில் மல்பெரி சாகுபடியின் முலம் புழு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வெண் பட்டு -ரூ.260 முதல் ரூ.310 வரை சராசரி விலை உள்ளது. தற்போது திருமணம் போன்ற பல சுப நிகழ்ச்சி நிகழ்வுகள் நடப்பதால் பட்டு ஆடை பயன்பாடு மற்றும் பட்டு நுால் தேவையும் அதிகரிக்க தொடங்கி உள்ளன,
இதனால் பட்டு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசு 'ஒரு உற்பத்தி ஒருமாவட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம்செய்துள்ளது.தேனி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தேர்வாகியுள்ளது. இத்திட்டத்தால் பட்டு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஈடுபடுத்த உள்ளனர் உற்பத்தியை அதிகரித்தால் மத்திய, மாநில அரசிற்கு மானியம் கூடுதலாகவே கிடைக்கும்.பட்டு புழு வளர்ப்பில் 200 விவசாயிகள் ஈடுபடுத்தும் திட்டத்தில் தயாராகி வருகின்றது.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment