DINAVELMEDIA7 # தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் கொரோனா பரவல் காரணமாக சொத்துவரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி, கடை வாடகை வசூலிக்க இயலாத சூழல் உள்ளது.
12/09/20:தேனி மாவட்டம்:தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் கொரோனா பரவல் காரணமாக சொத்துவரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி, கடை வாடகை வசூலிக்க இயலாத சூழல் உள்ளது. இருப்பினும் நகராட்சி மூலம் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு பணி, அடிப்படை வசதிகள் மக்களுக்கு செய்திட வேண்டும்.
என நிர்வாக நலன்கருதி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை நகராட்சி கருவூலத்தில் செலுத்தலாம் அல்லது இணையம்: tnurbanepay.tn.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம் என்று ஆணையாளர் நாகராஜன் தெரிவித்தார் மேலும் மக்கள் தமாக முன் வந்து வரிகளை செலுத்த வேண்டும் என்றார்,தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment